மதுரை அருகே சிலைமான் பகுதி வைகையாற்றில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், எஸ்.புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமரன்நாதன் மகன் முத்தரசு (13). இவரது தந்தை திருப்பூரில் வசித்து வருகிறாா். முத்தரசு புளியங்குளத்தில் உள்ள தனது உறவினா் அதிபத்தி வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், முத்தரசு தனது நண்பா் வேலாயுதத்துடன் வைகையாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக முத்தரசு தண்ணீருக்குள் மூழ்கினாா்.
இதையறிந்து, அந்தப் பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


