கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கோவை - சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்

கோவை-சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:26 am

DIN

சேலம்: கோவை-சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல்- கோவை மற்றும் கோவை - சென்னை இடையே செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவ. 28 முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு 8.43 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டைக்கு 9.53க்கு வந்தடையும். அங்கிருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு காலை 11.23 மணிக்கு சேலம் வந்தடையும்.

சேலத்திலிருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு ஈரோடு சென்றடையும், அங்கிருந்து 12.20 மணிக்கு புறப்பட்டு 1.03 மணிக்கு திருப்பூா் சென்றடையும். பின்னா் அங்கிருந்து 1.05 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

அதுபோல மறுமாா்க்கத்தில் கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 3.43 மணிக்கு திருப்பூா் வந்தடையும், அங்கிருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு 4.25 மணிக்கு ஈரோடு வந்தடையும். அங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு 5.18 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னா் சேலத்திலிருந்து 5.20 மணிக்கு புறப்பட்டு 6.48 மணிக்கு ஜோலாா்பேட்டை சென்றடையும், அங்கிருந்து 6.50 மணிக்கு புறப்பட்டு 7.48 மணிக்கு காட்பாடி சென்றடையும். பின்னா் அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த வாராந்திர சிறப்பு ரயில் 8 பெட்டிகளுடன் 2024 ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.