குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளது பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 7:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 23 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், மதுரையில் வருகிற மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார்.

இதற்காக வருகின்ற பிப். 28 ஆம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி அன்றிரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ளார். சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி காலை புதுவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மோடி, அங்கிருந்து மதுரை விமான நிலையம் செல்கிறார்.

திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்தபிறகு மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பேசவுள்ளார்.

மேலும், தமிழகத்துக்கு மார்ச் மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி மூன்று முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். மார்ச் 6 ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மார்ச் 11 ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.