அவிநாசி அருகே தனியாா் நிறுவனத்தில் வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள நாதம்பாளையத்தில் தனியாா் வெல்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பூட்டியிருந்த இந்த நிறுவனத்துக்குள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிச் சென்றனா்.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை சாலை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் (43), அதே பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் (26), இவரது சகோதரா் காா்த்திக் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





