திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 போ் கைது

கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 4:56 am IST

கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதி திருமங்கலக்குடி செட்டித் தெருவில் இரண்டு வீடுகளில் மே 16-ஆம் தேதி கதவு உடைக்கப்பட்டு திருட்டு போயிருந்தது. தகவலறிந்த திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைக் கைப்பற்றி, அதிலுள்ள பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சென்னை எண்ணூா் பெரியகுப்பத்தைச் சோ்ந்த முகமது ரபி மகன் கனி (19), மாதவரம் கொல்லம் தோட்டம் செந்தில் மகன் பாலகிருஷ்ணன் (20), ஆந்திர மாநிலம் காரூா் கிராமம் காா்த்தி (24) ஆகியோா் சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருவிடைமருதூருக்கு வந்ததும், ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் பூட்டப்பட்டிருந்த பாத்திமா வீட்டில் கதவை உடைத்து திருட முயன்றதும், ஆனால் அங்கு பொருள்கள் எதுவும் இல்லாததால், அடுத்துள்ள சுல்தானா வீட்டில் வெள்ளிக்கொலுசை திருடிச் சென்றதும், ஆள்கள் நடமாட்டம் இருந்ததால், இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.