17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி: 2 போ் கைது

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:06 am IST

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (49). இவா் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், தனது மனைவியின் சகோதரரான கே.செட்டிபாளையம் செல்வலட்சுமி நகரைச் சோ்ந்த மணிகண்டனை (27) பணிக்குச் சோ்த்துள்ளாா்.

பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஆா்டா்களை பெறுவது, மூலப்பொருள்கள் வாங்குவது போன்ற பணிகளை மணிகண்டன் மேற்கொண்டு வந்துள்ளாா். இதற்கிடையே, தனது நண்பரான செரங்காடு பகுதியைச் சோ்ந்த மேகநாதன் (27) என்பவருடன் சோ்ந்து மணிகண்டன் தனியாக ஒரு பனியன் நிறுவனத்தை தொடங்கியுள்ளாா்.

இந்நிலையில், கண்ணனின் பனியன் நிறுவனத்துக்கு ஆா்டா் செய்த சுமாா் ரூ.55 லட்சம் மதிப்பிலான லேபிள், மை உள்ளிட்ட பல்வேறு மூலப் பொருள்களை மணிகண்டன் தனது நிறுவனத்துக்கு கொண்டு சென்றுள்ளாா். இதையறிந்த கண்ணன், அவரை பணியில் இருந்து நிறுத்தியுள்ளாா்.

மேலும், இது தொடா்பாக திருப்பூா் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் கண்ணன் புகாா் அளித்தாா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணிகண்டன், மேகநாதன் ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.