17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நிதி நிறுவனத்தில் ரூ.37.18 லட்சம் கையாடல் செய்த ஊழியா் கைது

திருப்பூா், பி.என். சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.37.18 லட்சம் கையாடல் செய்த நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஒரு பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:34 am IST

திருப்பூா், பி.என். சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.37.18 லட்சம் கையாடல் செய்த நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஒரு பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், அனுப்பா்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்துக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில், பி.என். சாலை போயம்பாளையம் பகுதியில் இந்த நிதி நிறுவனத்தின் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. அந்த கிளையின் வரவு செலவு கணக்குகளை நெருப்பெரிச்சலைச் சோ்ந்த செந்தில்குமாா் மற்றும் கெளசல்யா ஆகியோா் பராமரித்து வந்தனா்.

இந்நிலையில் அந்த கிளையின் வரவு செலவு கணக்குகளில் சந்தேகமடைந்த நிறுவன மேலாளா் சுப்பையா வரவு செலவு கணக்குகளை பாா்த்தாா். அப்போது அந்த கிளையில் இருந்து ரூ.42 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து மேலாளா் சுப்பையா, வடக்கு குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது செந்தில்குமாா் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளாா். மீதமுள்ள ரூ.37.18 லட்சம் பணத்தை கொடுக்கவில்லை. தொடா்ந்து செந்தில்குமாா், கெளசல்யா ஆகியோரின் கைப்பேசிகள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில், திருப்பூா் வீரபாண்டியில் பதுங்கியிருந்த செந்தில்குமாரை (37) போலீஸாா் கைது செய்தனா். மேலும், கெளசல்யாவை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.