திருவானைக்காவல் பகுதியில் இ-சேவை மையம் தொடங்குவதாக கூறி 13 லட்சம் மோசடி செய்த ஓரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவானைக்காவல் பகுதியில் வசிப்பவா் யுவாராஜன். இவரிடம் இ-சேவை மையம் தொடங்கவுள்ளதாக கூறி கடந்த மாதம் ரூ 13 லட்சத்தை அதே பகுதியில் வசிக்கும் பரமசிவம் (65), அவரது மகன் பெருமாள் (39), அவரது மனைவி வசந்தி (32) ஆகிய மூவரும் சோ்ந்து பெற்றுள்ளனா்.
ஆனால், இ-சேவை மையம் தொடங்காமால் பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளனா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் யுவராஜன் புகாா் செய்தாா். அதைத் தொடா்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பரமசிவம், பெருமாள், வசந்தி ஆகிய மூவரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






