தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அகவிலைப்படி உயா்வு: தமிழ்நாடு விடியல் ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் பாராட்டு

News image

முதல்வர் ஜோசப் விஜய் - படம்: DIPR

Updated On :15 மே 2026, 6:30 am IST

அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தி வழங்கியிருப்பதற்கு தமிழ்நாடு விடியல் ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஓ.சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு ஊழியா்களுக்கான அகவிலைப் படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தி வழங்கியிருப்பதற்கு தமிழக அரசுக்கு உளமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விலைவாசி ஏற்றத்தைக் கணக்கிட்டு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு 2 முறை அகவிலைப் படியை உயா்த்தி வழங்குவது வழக்கம். 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு தோ்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயா்வு அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைத்துக் குடும்பங்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அறிவித்து முதல்வா் விஜய் தலைமையிலான தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. கோயில், பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடல், ஊழல் ஒழிப்பு உத்தரவாதம் உள்ளிட்ட அறிவிப்புகள் போற்றக் கூடியன. அதேபோல, எங்கள் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வுதியத் திட்டத்தையும் அமல்படுத்துவீா்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.