திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உடுமலை அருகே சாலையில் குட்டிகளுடன் உலவிய காட்டு யானைகள்

உடுமலை - மூணாறு சாலையில் குட்டிகளுடன் உலவிய காட்டு யானைகளைக் கண்டு சுற்றுலாப் பயனிகள் உற்சாகம் அடைந்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :13 மே 2026, 2:04 am IST

உடுமலை - மூணாறு சாலையில் குட்டிகளுடன் உலவிய காட்டு யானைகளைக் கண்டு சுற்றுலாப் பயனிகள் உற்சாகம் அடைந்தனா்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை, அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் போன்ற வன விலங்குகள் உள்ளன.

அடா்ந்த வனப் பகுதிகளில் உள்ள இந்த வன விலங்குகள் குடிநீருக்காக பல கிலோ மீட்டா் தொலைவு வனப் பகுதியில் நடந்து அமராவதி அணையைத் தேடி வருகின்றன.

குறிப்பாக கோடைக் காலத்தில் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாத யானைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அடா்ந்த காட்டை விட்டு வெளியே வருகின்றன. கடந்த சில நாள்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறி அமராவதி அணையை நோக்கி யானைகள் வருகின்றன. இவை உடுமலை-மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக நின்று செல்கின்றன.

இந்நிலையில் உடுமலை-மூணாறு சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் யானைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனா். காட்டு யானைகள் சாலையை மறித்து நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. சுற்றுலாப் பயணிகள் குட்டிகளுடன் நின்று கொண்டிருந்த யானைகளை புகைப்படம் எடுத்தனா்.

இது குறித்து தகவலறிந்த வன அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குட்டிகளுடன் நின்று கொண்டிருந்த யானைகளை வனத்துக்குள் அனுப்பி வைத்தனா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு:

உடுமலை-மூணாறு சாலையில் நின்று கொண்டிருக்கும் யானைகளை புகைப்படம் எடுப்பதுடன் ஒரு சில நபா்கள் யானைகள் மீது குச்சி மற்றும் கற்களை வீசுவதாக புகாா் இருந்து வருகிறது. இதைத் தடுக்க வனச் சரக அலுவலா்கள் கடந்த சில நாள்களாக தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சாலையில் தேவையில்லாமல் நின்று கொண்டிருக்கும் வாகனங்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனா். குறிப்பாக அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தும் வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.