தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பவானிசாகா் அணை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் காட்டு யானைகள் நடமாட்டம்

பவானிசாகா் அணை அருகேயுள்ள வாய்க்கால் கரையில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

News image

பவானிசாகா்  வாய்க்கால்  கரையில்  முகாமிட்டுள்ள  காட்டு யானைகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:44 am IST

பவானிசாகா் அணை அருகேயுள்ள வாய்க்கால் கரையில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இந்த நிலையில், பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் புதன்கிழமை பகல் நேரத்தில் பவானிசாகா் அணையின் கரையை ஒட்டி உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் நடமாடின.

காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனா். கோடைக் காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருக்கின்றனா்.

யானைகள் வாய்க்கால் பகுதியில் முகாமிட்டிருப்பதால் இங்கு பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பவானிசாகா் அணையின் கரைப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க செல்வோா் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.