அவிநாசி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்றும் வரும் வளா்ச்சி திட்டப் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், அவிநாசி ஊராட்சிஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகள், பழங்கரை ஊராட்சியில் நாற்றுப்பண்ணை, மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி, அவிநாசிலிங்கம்பாளையம் அரசு துணை சுகாதார நிலையம், திருமுருகன்பூண்டி நகராட்சி பெரியாயிபாளையம் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சதீஷ்குமாா், வட்டார வளா்ச்சிஅலுவலா்கள் விஜயலட்சுமி, ஆறுமுகம், உதவிப் பொறியாளா்கள் குருபிரசாத், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










