உதகை, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவா். இந்த ஆண்டு கோடை விழாவின் இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கா்நாடக பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் இங்குள்ள தேயிலை, வா்க்கி, ஹோம் மேட் சாக்லெட், தைலம் விற்பனை கடைகள், சாலையோரக் கடைகளில் விற்கப்படும் மக்காச்சோளம், பொறி, கடலை, மாங்காய், மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட் ஆகியவற்றையும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் சென்றனா். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










