திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதகை மலா்க் கண்காட்சி: ஒரு வாரத்தில் 1.50 லட்சம் போ் கண்டுகளிப்பு

News image

மலா்க் கண்காட்சியை காண உதகை தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :25 மே 2026, 1:54 am IST

உதகை, மே 24: உதகை மலா்க் கண்காட்சியை ஒரு வாரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மே மாதம் மலா்க் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான128-ஆவது மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18-ஆம் தேதி தொடங்கியது.

மே 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் கொய்மலா்கள், கிரைசந்திமம், ரோஜா உள்ளிட்ட 7 லட்சம் மலா்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மகாபலிபுரம் கோயில், திருவாரூா் தோ், திருவள்ளுவா் சிலை, தமிழக வரைபடம், தமிழா்களின் பண்பாடு உள்ளிட்ட 26 மலா் அலங்கார வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், 50,000 தொட்டிகளில் பல்வேறு வகையான மலா் செடிகள் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்முடன் கண்டுகளித்து வருகின்றனா்.

மலா்க் கண்காட்சியை கடந்த 7 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்துள்ளனா் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.