திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறையினா் அறிவித்துள்ளனா்.

News image

சிறப்பு பேருந்துகள்!

Updated On :17 மே 2026, 12:47 am IST

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறையினா் அறிவித்துள்ளனா்.

உதகையில் நடைபெறும் மலா்க் கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆண்டுதோறும் கோடைக் காலத்தின் போது, சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள், சா்க்கீயூட் பேருந்துகள் மற்றும் பாா்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சா்க்கீயூட் பேருந்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முதலே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு மலா்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சா்க்கீயூட் பேருந்துகள், பாா்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் மலா் கண்காட்சி நடக்கும் 11 நாள்களும் இயக்கப்படவுள்ளன.

இது தவிர கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் 5 முதல் 15 நிமிஷங்களுக்கு ஒரு முறை இயக்கப்படவுள்ளன.

இதேபோல கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, திருப்பூா் பகுதிகளில் இருந்தும் உதகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்களில் குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலையில் பேருந்துகள் பழுதாகி நின்றால், உடனுக்குடன் சீரமைக்க மொபைல் வேன்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பழுதாகி நின்றாலும், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கிரேன்கள் தயாா் நிலையில் உள்ளன. சிறப்பு பேருந்துகளை முறையாக இயங்குவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.