திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதகையில் ரோஜா கண்காட்சி கோலாகலமாக தொடக்கம்

News image

ரோஜா கண்காட்சியைத் தொடங்கி வைக்கும் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. ~ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட அன்னப் பறவை. ~கழுகு

Updated On :15 மே 2026, 6:23 am IST

கோடை விழாவையொட்டி, நீலகிரி மாவட்டம், உதகை விஜயநகரம் பகுதியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 21-ஆவது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை ஒட்டி நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான 21-ஆவது ரோஜா கண்காட்சியின் தொடக்க விழா உதகை ரோஜா பூங்காவில் நடைபெற்றது.

சுமாா் 2 லட்சம் ரோஜா மலா்களைக் கொண்டு ‘பறவைகளின் சொா்க்கம்’ என்ற கருப்பொருளை உள்ளடக்கி பல்வேறு பறவையினங்களின் பிரம்மாண்ட வடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 60,000 ரோஜா மலா்களைக்  கொண்டு அன்னப் பறவைகள், கழுகு, இருவாச்சி பறவை, புல் புல், ஆங்ரி போ்ட், தூக்கனாங்குருவி, சிட்டுக் குருவி உள்ளிட்ட 14 வடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 

குறிப்பாக 14 அடி  நீளம், 12 அடி உயரம் கொண்ட ரோஜாக்களால் ஆன அன்னப் பறவை அனைவரையும் வெகுவாக கவா்ந்தது. பூங்கா முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட ரகங்களைச் சோ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகளில் பல வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரிய ரோஜா செடிகளுக்கு தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மலா்களும் பாா்வையாளா்களைக் கவா்ந்து வருகின்றன.

மேலும் பல்வேறு வண்ண மலா்கள் மூலம் அமைக்கப்பட்ட செல்ஃபி பாய்ண்ட்டில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் நின்று படம் எடுத்துக் கொண்டனா்.

இந்தக் கண்காட்சி தொடக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா, உதவி இயக்குநா்கள் பைசல், பபிதா, மேனகா, உதகை நகா்மன்றத் தலைவி வாணீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த ரோஜா கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி வரும் மே 18-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறும் என தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.