திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மசினகுடியில் யானை உடல் மீட்பு

மசினகுடி அருகே யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

News image

மசினகுடி, சிக்கோலை ஆற்றுப் பகுதியில் உயிரிழந்து கிடந்த யானை

Updated On :20 மே 2026, 2:10 am IST

மசினகுடி அருகே யானை உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக் கோட்டம், சிக்கோலை ஆற்றுப் பகுதியில் வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு அழுகிய நிலையில் யானையின் உடல் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் உயா் அதிகாரிகள், வன கால்நடை மருத்துவா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினா் யானையின் உடலை ஆய்வு செய்தனா். இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, பின்னா் அங்கேயே புதைக்கப்பட்டது.

உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.