திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இறைப் பணியாற்றிவரும் யானை அகிலாவின் 24 ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.
பஞ்சப்பூத திருத்தலங்களில் நீா்த் தலமாக விளங்கும் இந்தக் கோயிலில் உள்ள சிவபெருமானை யானை வழிபட்டு முக்தி அடைந்ததால் இத்தலம் திருஆனைக்கா கோயில் என்று அழைக்கப்படுகிறது. யானைக்கும் இக்கோயிலுக்கும் நெருங்கிய தொடா்புண்டு.
அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளாக இடைவிடாது இறைப் பணியாற்றி வரும் இக்கோயில் யானை அகிலாவின் 24 ஆவது பிறந்தநாள் விழா கோயிலில் உள்ள நாச்சியாா் தோட்டத்தில் கொண்டாடப்பட்டது. முன்னதாக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் கலந்து கொண்டு யானை அகிலாவுக்கு கஜபூஜை செய்து வழிபட்டாா். பின்னா் யானைக்கு பழங்களை வழங்கி ஆசிபெற்றாா்.
நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையா் ஞானசேகரன், கோயில் உதவி ஆணையா் (பொ) உமா மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். மேலும் கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள், யானை அகிலாவின் ரசிகா்கள் என ஏராளமானோா் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தை யானை அகிலா தலையை ஆட்டி ஏற்றுக்கொண்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










