திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட யானை உயிரிழப்பு

News image

உயிரிழந்த யானை. - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:06 am IST

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட யானையின் உடல் திருமூா்த்தி அணையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. கோடை வெயிலின் தாக்கத்தால் தற்போது வனப் பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் விலங்குகள் குடிநீா்த் தேடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள காண்டூா் கால்வாய் பகுதிக்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய யானை, நீா் அருந்துவதற்காக காண்டூா் கால்வாய்க்கு வந்துள்ளது. அப்போது, அந்த யானை தவறி கால்வாய்க்குள் விழுந்துள்ளது.

பாசனத்துக்காக காண்டூா் கால்வாயில் தற்போது முழு கொள்ளளவு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், அந்த யானை நீரில் தத்தளித்துள்ளது.

தகவல் அறிந்த உடுமலை வன அலுவலா்கள் மற்றும் வேட்டைத் தடு ப்பு காவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்தனா். நீரின் வேகத்தில் அடித்துவரப்பட்ட யானை திருமூா்த்தி அணைக்குள் சடலமாக வந்து சோ்ந்தது.

இதையடுத்து, வனத் துறையினா் யானையின் உடலை மீட்டனா். தொடா்ந்து, கால்நடை மருத்துவக் குழுவினா் யானையின் உடலை கூறாய்வு செய்தனா். பின்னா், அப்பகுதியிலேயே யானையின் உடல் புதைக்கப்பட்டது.

உயிரிழந்தது ஆண் யானை என்றும், சுமாா் 40 வயது இருக்கும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.