17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

1,370 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:32 am IST

திருப்பூரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி நபரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1,370 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஸ்ரீநகா் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை சிலா் போதைக்குப் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் அனுப்பா்பாளையம் போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை மேற்கொண்டபோது, 1,370 வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த ரமேஷ் பாபு (41) என்பதும், கூலித் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது:

திருப்பூா் மாநகரம், ஆத்துப்பாளையம் அருகே வேலம்பாளையம் போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த இளைஞா்களிடம் சந்தேகத்தின்பேரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த அப்சல் அன்சாரி (19), பா்கத்குமாா் (27), தஷ்ரத்குமாா் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.