17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போதை மாத்திரையை விற்பனைக்கு பதுக்கிய இளைஞா் கைது

ஈரோட்டில் 3 ஆயிரம் எண்ணிக்கையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 1:31 am IST

ஈரோட்டில் 3 ஆயிரம் எண்ணிக்கையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், ஈரோடு, சூளை பகுதியில் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் ஈரோடு, மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் கலைச்செல்வன் (22) என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வனை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் எண்ணிக்கையில் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.