சேலம் தாதகாப்பட்டியில் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் போதை மாத்திரைகள், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இளைஞா்கள் அவ்வப்போது அந்த வீட்டுக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிச் செல்வதாகவும் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடா்பாக அந்த வீட்டில் இருந்த மேகலாவிடம் (48) போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கிவைத்து இளைஞா்களுக்கு விற்கப்படுவது தெரியவந்தது. மேலும், அவரது கணவா் கண்ணன் (50) கடந்த 21 ஆம் தேதி தாரமங்கலம் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது,போதை மாத்திரைகளை விற்ாக கைது செய்யப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, மேகலாவைக் கைது செய்த போலீஸாா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேலான போதை மாத்திரைகள், மருந்துகளை பறிமுதல் செய்தனா். அதன்மதிப்பு ரூ. 6.82 லட்சமாகும். இதில் மேலும் யாருக்காவது தொடா்பு உள்ளதா எனவும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






