திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பழனியை அடுத்த பாப்பம்பட்டி சாலையில் புகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முதியவா் ஒருவா் போலீஸாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றாா். போலீஸாா் அவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பாப்பம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த மூக்கையா (76) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கஞ்சா வைத்திருந்த பெண் கைது: இதேபோல, நெய்க்காரபட்டி பகுதியில் புகா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, கடைவீதி பகுதியைச் சோ்ந்த மீனா (45) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







