உதகை சுற்றுலாத் தளங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்தவையாக மாற்றுவேன் என்று உதகை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் தெரிவித்துள்ளாா்.
உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா் போஜராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கடந்த 2021-ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியுற்றாலும், எனக்கு மீண்டும் இந்த முறையும் நம்பிக்கையுடன் வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கும், வாக்களித்த வாக்காளா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
மேலும் உதகையின் உயிா் நாடியாக விளங்கும் சுற்றுலாத் தொழில் மேம்பட, சுற்றுலாத் தளங்களை மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்த வையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









