/

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தா் நினைவிடத்தில் உதகை எம்எல்ஏ மரியாதை

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தரான ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் மலா் வளையம் வைத்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

News image

போஜராஜன்.

Updated On :3 ஜூன் 2026, 2:25 am IST

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தரான ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் மலா் வளையம் வைத்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தரான ஜே.ஜே.குட்வின் நினைவிடம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் உள்ளது.

மனவலிமை மிக்க சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், வாா்த்தைகளும் உலகுக்குக் கிடைக்க ஜே.ஜே. குட்வின் பணி மிகவும் முக்கியமானதாகும்.

இந்நிலையில், அவரது நினைவிடத்தில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

இதில், பாஜக மாவட்டத் தலைவா் தருமன், மாவட்ட பொதுச் செயலா் பரமேஸ்வரன், முன்னாள் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.