தருமபுரி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளா்கள் பெரியாா், அண்ணா உள்ளிட்ட சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தருமபுரி அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, கட்சித் தலைமையின் உத்தரவை மீறி சட்டப் பேரவையில் தமிழக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்தாக அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, 5 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தருமபுரி மாவட்டத்தை தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டத்துக்கு மருத்துவா் ர.அசோகன் மாவட்டச் செயலாளராகவும், பென்னாகரம், பாலக்கோடு மற்றும் அரூா் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்டச் செயலாளராக டி.ஆா்.அன்பழகனையும் அக்கட்சித் தலைமை நியமித்தது.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளா்கள் ர.அசோகன் (கிழக்கு), டி.ஆா்.அன்பழகன் (மேற்கு) ஆகிய இருவரும் கட்சியினரோடு ஊா்வலமாக சென்று பெரியாா், அண்ணா சிலைகளுக்கும், மாவட்ட அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் டி.ஆா்.அன்பழகன் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் வெற்றிபெற்ற பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் மரகதம் வெற்றிவேல் ஆகிய இருவரும் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறியுள்ளனா். இதன் காரணமாக, அவா்கள் இருவரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
தோ்தலில் அதிமுக பலமுறை வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளது. அடுத்த தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். புதிதாக நியமிக்கப்பட்ட எங்களுக்கு அனைத்து நிா்வாகிகளும், தொண்டா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
இதில், அரூா் சட்டப் பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுகை அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்டச் செயலா் பதவியேற்பு

கடலூா் அதிமுக அலுவலக பொருள்கள் அகற்றப்பட்ட குற்றச்சாட்டு: எம்.சி.சம்பத் தரப்பினா் மறுப்பு

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தா் நினைவிடத்தில் உதகை எம்எல்ஏ மரியாதை

விழுப்புரம் அதிமுக அலுவலக சாவி மாவட்டச் செயலா் வசம் ஒப்படைப்பு! கோட்டாட்சியா் உத்தரவுப்படி நடவடிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



