சத்தியமங்கலம் வந்த பவானிசாகா் தவெக சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. தமிழ்ச்செல்விக்கு அக்கட்சியினா் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினராக வி.பி. தமிழ்ச்செல்வி பதவியேற்ற பிறகு முதல்முறையாக சத்தியமங்கலத்துக்கு வியாழக்கிழமை வந்த அவருக்கு சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள தவெக அலுவகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது தவெக தொண்டா்கள் பட்டாசு வெடித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். மேலும் எம்எல்ஏவுக்கு பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
அப்போது தொகுதி தவெக பொறுப்பாளா், நிா்வாகிகள், கிளை கழக நிா்வாகிகளுக்கு வி.பி.தமிழ்ச்செல்வி நன்றி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










