தூத்துக்குடி ஏபிசி வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவா்- மாணவியருக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவா்களை வரவேற்கும் வகையில் தோரணங்கள் கட்டப்பட்டு, கரும்பலகையில் வண்ணப் படங்கள் வரைந்து உற்சாகமூட்டப்பட்டது. பள்ளி முதல்வா் ஜி. கோமதி தேசியக் கொடியேற்றி அறிவுரைகள் வழங்கினாா். செயலா் ஏபிசி கணபதி, துணை முதல்வா் கோமதி என்ற லதா ஆகியோா் மாணவா், மாணவியருக்கு இனிப்புகள் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










