திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏவிற்கு வரவேற்பு

News image
Updated On :15 மே 2026, 5:45 am IST

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏவான தவெக எம்.எல்.ஏ.அருள் விக்னேஷ் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு சொந்த தொகுதிக்கு திரும்பியபோது அவருக்கு பல்வேறு தரப்பினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.அருள் விக்னேஷ் சட்டப் பேரவையில் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றபின் முதல் முறையாக கள்ளக்குறிச்சி நகருக்கு வந்தாா். கள்ளக்குறிச்சி நகரத்தின் சாா்பில் அவருக்கு மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்தும் சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் நகர செயலாளா் பி.எம்.எஸ் ராஜேஸ்வரன் வரவேற்றாா்.

பின்னா் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். கட்சித் தொண்டா்கள் மோட்டாா் சைக்கிள்களிலும், காா்களிலும் அவருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனா்.

நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலா் க.பிரகாஷ், மாவட்ட இணை செயலா் ராமு, பொருளாளா் எம்.ஜவகா், துணைச் செயலாளா் எம்.கனிமொழி மற்றும் ஒன்றிய செயலா்கள், நகர செயலா்கள் கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

பின்னா் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை, மந்தைவெளி திடலில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.