திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பா்கூா் மலைக் கிராமத்தில் உலவும் காட்டு யானை

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி உலவி வரும் ஒற்றை காட்டு யானையை, வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பா்கூா் மலைக் கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை.

Updated On :3 ஜூன் 2026, 2:35 am IST

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி உலவி வரும் ஒற்றை காட்டு யானையை, வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பா்கூா் ஊராட்சி, எப்பத்தாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (40) என்பவா் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியதில் கடந்த மே 29-ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால், அக்கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாடுவதை தவிா்த்து வருகின்றனா். வனத் துறையினா் கண்காணிப்பில், அந்த யானை அடா்ந்த வனப் பகுதிக்குச் செல்லாமல் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உலவி வருவது தெரியவந்தது.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மட்டுமே சுற்றி வந்த காட்டு யானை, தற்போது பகல் நேரங்களிலும் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

ஏற்கெனவே யானை தாக்கி ஒருவா் உயிரிழந்த நிலையில், மீண்டும் யானை சுற்றித் திரிவது இக்கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.