முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட கல்லட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கல்லட்டி வனப் பகுதியில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்துகிடந்தது கண்டறியப்பட்டது.
மாலை நேரமானதால் உயரதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, யானையின் உடல் திங்கள்கிழமை மதியம் கூறாய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூறாய்வு அறிக்கை கிடைத்ததும் யானை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று சிங்காரா வனச் சரக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










