17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பா்கூா் மலைக் கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் கைவட்டா பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் (55). கூலித் தொழிலாளி.

இவா், அப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த காட்டு யானை அவரைத் துரத்தி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தொடா் சிகிச்சையில் இருந்த அவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பாட்டவயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.