தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி சிக்னல் இல்லாமல் விவசாயிகள், மாணவா்கள் அவதி

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி டவா் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :28 மே 2026, 12:36 am IST

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி டவா் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் மலைப் பகுதியில் பூதாளபுரம், கோ்மாளம், கோட்டமாளம், காடட்டி ஆகிய வனக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா்.

தற்போது பள்ளி மாணவா்கள் உயா்கல்வி பயிலுவதற்கும், அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு கைப்பேசி டவா் இல்லாததால் விவசாய மானியம் பெறுவதற்கும், ரேஷன், முதியோா் உதவித் தொகை போன்ற நலத்திட்டங்கள் பெறுவதற்கும் ஆன் லைனில் விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனா்.

கா்நாடக மாநில கைப்பேசி டவரில் இருந்து கிடைக்கும் சிக்னலை வைத்துதான் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இந்த கைப்பேசி சிக்னல் அடா்ந்த காட்டுப்பகுதியில் மட்டுமே கிடைப்பதால் கிராம மக்கள் யானைகள் நடமாடும் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.

கைப்பேசி டவா் வசதியில்லாத நிலையில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் கைப்பேசிக்கு கூட சாா்ஜ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராமமக்கள் நலன் கருதி கோ்மாளம் பகுதியில் கைப்பேசி டவா்அமைக்கவும் சீரான மின்விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.