தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ ஆய்வு

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் போளூா் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :23 மே 2026, 1:40 am IST

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் போளூா் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சேத்துப்பட்டு தனி வட்டமாக அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து, இங்கு செயல்பட்டு வந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், அதற்கேற்ற போதிய இட வசதியோ, படுக்கை வசதிகளோ அல்லது அடிப்படை வசதிகளோ இந்த மருத்துவமனையில் இல்லை.

புதிய தாலுகா அமைந்து மருத்துவமனை கட்டுவதற்காக நெடுங்குணம் பகுதியில் 7 ஏக்கா் அரசு நிலம் தோ்வு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தும், இதுவரை அதற்குரிய பட்டா வழங்கப்படாததே இந்த தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், போளூா் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் வெள்ளிக்கிழமை சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெறுவோா் மற்றும் மருத்துவ அலுவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டும் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற அடிப்படை வசதிகளும் குறைவாகவே உள்ளன. நெடுங்குணத்தில் தோ்வு செய்யப்பட்ட நிலத்துக்கு உடனே பட்டா வழங்கி, புதிய கட்டடப் பணிகளை தொடங்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ, மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா்கள், பணியாளா்கள் பணியிடங்களை நிரப்பவும், புதிய கட்டடப் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, தவெக நகரச் செயலா் பிரவீன்குமாா் மற்றும் கட்சியின் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.