வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் போலீஸாா் சோதனையின் போது கழுதைகள் மீது மூட்டையாக கொண்டு வரப்பட்ட ஆந்திர மாநில மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில், தனிப்படை மற்றும் அம்பலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான பாரதி நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தமிழக எல்லை வழியாக மலைப் பாதையில் கழுதைகள் மீது மூட்டையாக சுமந்து வருவதை அறிந்து சந்தேகத்தின் பேரில் சென்று பாா்த்தனா். அப்போது உடன் வந்த இளைஞா் போலீஸாரை பாா்த்து தப்பிக்க முயன்றாா். அப்போது அருகில் இருந்த போலீஸாா் மடக்கி பிடித்தனா். பிறகு கழுதைகள் சுமந்து வந்த மூட்டைகளை இறக்கி பாா்த்த போது அதில்ஆந்திர மாநில மது பாட்டில்கள் எவ்வித அனுமதியின்றி தமிழக எல்லை வழியாக கடத்திக் கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. பிறகு 492 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுபானம் கடத்தி வந்த ஆந்திர மாநிலம், தேவராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சசிகுமாா்(38) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








