ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய ஆந்திர இளைஞரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் (38). இவா் சனிக்கிழமை திருப்பதியிலிருந்து ரயில் மூலம் மாலை 5 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்தாா்.
அங்கிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயில் நிலையம் முன்புள்ள பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் ஏற முயன்றாா். அப்போது, அவரது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியை மா்மநபா் வழிப்பறி செய்வதை உணா்ந்தாா்.
உடனடியாக அவா் கூச்சலிட்டதை அடுத்து சக பயணிகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து சோதித்தனா். அப்போது, அந்த நபரிடம் கருணாகரனின் கைப்பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் உதவியுடன் அந்த இளைஞரை காட்பாடி காவல் நிலையத்தில் கருணாகரன் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.
அதன்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபா் ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், கோமட்பல்லியைச் சோ்ந்த அசோக் (20) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 16,000 மதிப்புள்ள கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







