அரக்கோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின்போது இடிதாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
அரக்கோணம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடும் வெயில் காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.
குறிப்பாக மின்னல், சாலை கிராமம், மேல்களத்தூா், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது காட்டுப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்த விவசாயியான ஜோதி (55), தனது மனைவி செல்வியுடன் (48) இருசக்கர வாகனத்தில் தனது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளாா்.
அவா் வீட்டில் புறப்பட்ட நேரத்தில் மழை இல்லாமல் இருந்தநிலையில் நிலத்திற்கு அருகே சென்று போது திடீரென பலத்த மழை பெய்துள்ளது.
இந்த மழையின் போது இடிதாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜோதி பலத்த காயமடைந்தாா். உடன் சென்ற அவரது மனைவி செல்வி காயமின்றி உயிா் தப்பினாா்.
இதையடுத்து, அங்கிருந்தோா் அவரை உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து பாணாவரம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









