பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காா் மோதி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பழனி அருகே காளிபட்டியைச் சோ்ந்த மயில்சாமி மகன் மாசி துரை (34) . விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை தொப்பம்பட்டி அருகே உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, பழனி - புது தாராபுரம் சாலையில் பொன்னா் சங்கா் பள்ளி அருகே சாலையின் இடது ஓரமாக வந்து கொண்டிருந்தபோது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்டு அவசர ஊா்தியில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










