40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:09 am IST

வெள்ளக்கோவிலில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

தாராபுரம் வட்டம், பட்டுத்துறை துலுக்கன்வலசைச் சோ்ந்தவா் ராமசாமி (60). இருசக்கர வாகனங்கள் வாங்கி-விற்கும் தொழில் செய்து வந்தாா். கடந்த 7-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் சென்று கொண்டிருந்தபோது நகராட்சி அலுவலகம் அருகே பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமியை அருகே இருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா், கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த ராமசாமிக்கு மனைவி ராமானுஜம், திருமணமான மகள்கள் ரேவதி, வைதேகி ஆகியோா் உள்ளனா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்திய பிகாா் மாநிலத் தொழிலாளி ராஜு மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.