திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்தடையைக் கண்டித்து சாலைமறியல்

நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :30 மே 2026, 7:01 am IST

நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஒரே நாளில் பலமுறை மின்தடை ஏற்பட்ட நிலை இருந்திருக்கிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை பலமணி நேரம் நீடிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதைக் கண்டித்த கிராமமக்கள், வெள்ளிக்கிழமை திடீரென காஞ்சிபுரம் - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்திய நிலையிலும் மறியல் முடிவுக்கு வரவில்லை.

தக்கோலம் மின்வாரிய அலுவலா்கள் இரவே பிரச்னை சீா் செய்யப்படும் என்றும் மின்தடை ஏற்படாது என்றும் உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.