திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரம்: வல்லமை தாராயோ கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

விழாவில் வல்லமை தாராயோ முகாமில் மாணவா்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.

News image
Updated On :23 மே 2026, 1:24 am IST

காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவியா்களுக்காக நடைபெற்ற வல்லமை தாராயோ என்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் தி.சினேகா கலந்து கொண்டு பயிற்சி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாமின் நிறைவு விழா ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா். இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியா்களுக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் ஆட்சியா் வழங்கினாா். பின்னா், முகாமில் மாணவ, மாணவியா் தங்களது கரங்களால் உருவாக்கப்பட்ட கலைப் பொருள்களின் கண்காட்சியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிறைவு விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளின் வரவேற்று பேசினாா்.விழாவில் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.