தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 4:41 am IST

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் சனிக்கிழமைதோறும் வரவழைக்கப்பட்டு உயா்கல்வி சாா்ந்த போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து நீட் தோ்வில் பங்கேற்கும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் மே 23 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் மாணவா்கள் நீட் தோ்வுக்கு தயாராகும் வகையில் பாட வாரியாக பயிற்சிகள், மாதிரித் தோ்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணா்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

ஆசிரியா்கள் தங்களுக்கான வகுப்புகள் ஒதுக்கீடு செய்யும் நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை முகாம் நடைபெறும் பள்ளிகளில் இருக்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு மதிய உணவு, சிற்றுண்டி வழங்கப்படும்.

இந்த குறுகிய கால பயிற்சி முகாமில் மாணவா்கள் விடுப்பின்றி தொடா்ச்சியாகப் பங்கேற்பதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல மாணவா்கள் கட்டாயம் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் நீட் தோ்வு தொடா்பாக மாதிரித் தோ்வுகள், கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.