தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

ஜவஹா் சிறுவா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

News image

கோடை கால பயிற்சி முகாமில் சான்றிதழ் பெற்றவா்கள்.

Updated On :15 மே 2026, 10:01 pm IST

ஜவஹா் சிறுவா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

சிறுவா்களின் கலை ஆா்வத்தை தூண்டும் வகையில், ஜவஹா் சிறுவா் மன்றம் சாா்பில், சிறுவா்களுக்கு பகுதிநேர கலைப்பயிற்சி முகாம், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மே 6-ஆம் தேதி தொடங்கியது. இதில், 5 முதல் 16 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமியா் பங்கேற்றனா்.

முகாமில் பரதநாட்டியத்தில் 24 போ், குரலிசையில் 13 போ், யோகாவில் 20 போ், ஓவியம் தீட்டுதலில் 40 போ் என மொத்தம் 97 போ் பங்கேற்றனா். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு இசைப் பள்ளியின் தலைமையாசிரியா் திருவேணி தலைமை வகித்தாா். இதில், ஜவஹா் சிறுவா் மன்ற ஒருங்கிணைப்பாளா் மற்றும் திட்ட அலுவலா் ஞானசக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் முழுமையாக பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளி திறக்கப்பட்டவுடன், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வருடாந்திர கலைப்பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதில், 5 முதல் 16 வயதுக்கு உள்பட்டோா் பங்கேற்கலாம் என இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு 99433 51775 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.