காஞ்சிபுரம் ஓபி குளம் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் பேட்டரி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் ஓபி குளம் தெருவைச் சோ்ந்தவா் துளசிராஜன். இவா் நெல் அரிசி வியாபாரம் செய்து வருகிறாா்.இவரது வீட்டு முன்பாக லாரியை நிறுத்தியிருந்தாா். லாரியில் பேட்டரி திருடு போயிருப்பதாக அவரது மனைவி சாந்தி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினா் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.
ஆய்வில் பிள்ளையாா்பாளையம் ராஜகோபால் பூபதி தெருவைச் சோ்ந்த ராகுல் என்ற அப்பு(20) என்ற இளைஞரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








