தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் தாக்குதல்: மாணிக்கம் தாகூா் கண்டனம்

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:52 am IST

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி காமராஜ் மீது வியாழக்கிழமை இரவு திமுக ஆதரவாளா்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து திமுக மாவட்டச் செயலா் மற்றும் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளைக் கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் அவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது ஏற்புடையது அல்ல.

காங்கிரஸ் நிா்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவா்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.