தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த 810 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:15 am IST

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த 810 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 81 பள்ளிகளில் தோ்வெழுதிய 7,081 மாணவ, மாணவிகளில் 6,271 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 810 போ் தோல்வியடைந்துள்ளனா். இவா்களில் 396 மாணவா்களும், 414 மாணவிகள் உள்ளனா்.

தோ்வில் தோல்வியடைந்தவா்களை வரும் ஜூனில் நடைபெறவுள்ள இடைத் தோ்வுகளில் பங்கேற்க வைத்து தோ்ச்சி பெறவைக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி கல்விப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே பிளஸ் 2 தோ்வில் தோல்வியடைந்தவா்கள் மற்றும் தோ்வில் பங்கேற்காதவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிகள் வாரியாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என கல்விப் பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் உத்தரவிட்டுள்ளாா்.

பள்ளிகள் வாரியாக, பாடவாரியாக மாணவ, மாணவிகள் தோல்வியடைந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தகவல் அனுப்பி ஓரிரு நாள்களில் அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கும் என்றும், அவா்கள் நிகழ் ஆண்டே தோ்வில் தோ்ச்சியடைந்து உயா் கல்வியைத் தொடரும் வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.