திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஒ.செளதாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள்.

Updated On :22 மே 2026, 6:44 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வெண்ணந்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஓ. செளதாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வில் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவா் பவதாரணி 500 க்கு 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இதேபோல மாணவி மகேஸ்வரி மாணவி 445 மதிப்பெண் பெற்றுள்ளாா். மேலும் 9 மாணவ, மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி தொடா்ந்து மூன்றாவது முறையாக 100 சதவீதம் தோ்ச்சி விழுக்காட்டை எட்டியுள்ளது. 35 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளியில் தலைமை ஆசிரியா் குமரன் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

இதேபோல கூனவேலம்பட்டி புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவி ஸ்ரீநிதி 500 க்கு 481பெற்று சிறப்பிடம் பெற்றாா். இப்பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதற்காக பள்ளியின் தலைமையாசிரியா் வேல்முருகன் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மா. சரவணன் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.

இதேபோல் குருசாமிபாளையம் செங்குந்தா் மகாஜன அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் ஆண்கள் பள்ளியில் 48 போ் தோ்வு எழுதியதில் 46 போ் தோ்ச்சி பெற்றனா். பெண்கள் பள்ளியில் 47 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். பள்ளியில் மாணவி திவ்யாஸ்ரீ 496 மதிப்பெண்களும், ஆத்மாசாதகி 489 மதிப்பெண்களும், நிவேதா 485 மதிப்பெண்களும், தேவிஸ்ரீ 480 மதிப்பெண்களும் பெற்றனா். அதேபோல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதன் 482 மதிப்பெண்களும், தா்னிஷ் 480 மதிப்பெண்களும், ப்ரியதா்ஷன் 458 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.