திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: முன்னாள் காவல் ஆணையா் அருண் ஆஜராக உத்தரவு

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள்கொணா்வு வழக்கு விசாரணையில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :21 மே 2026, 3:12 am IST

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள்கொணா்வு வழக்கு விசாரணையில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொளத்தூா் ராமதாஸ் நகரில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி எல்.கே.சுதீஷின் மனைவி பூா்ணஜோதிக்கு 2.10 ஏக்கா் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி அதில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூா்ணஜோதிக்கு வழங்குவதாகக் கூறி, தனியாா் கட்டுமான நிறுவன உரிமையாளா் சந்தோஷ் ஷா்மா என்பவா் ஒப்பந்தம் செய்திருந்தாா்.

ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளை போலியான கையொப்பமிட்டு சந்தோஷ் ஷா்மா ரூ.43 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் சந்தோஷ் ஷா்மா கைது செய்யப்பட்டாா். இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கிய பலருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் ஷா்மா மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தங்களுடைய மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மகளை கவனித்துக் கொள்வதற்கு சந்தோஷ் ஷா்மாவுக்கு பிணை வழங்க வேண்டும், குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, சந்தோஷ் ஷா்மாவின் மனைவி கல்பனா ஷா்மா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டா் தடுப்புச் சட்டத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும்? எனத் தெரியாதா, என கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.