சென்னை மெரீனா கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின் விளக்குகள் அமைப்பதற்கான ஆய்வில் மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
சென்னை மெரீனா கடற்கரையில் தேவையான மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகள் ஒலிபரப்புவதற்கான ஒலி பெருக்கி வசதிகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் வகையில், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், காவல் ஆணையா் அமல்ராஜ் ஆகியோா் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா்.
காமராஜா் சாலைப் பகுதியையொட்டிய அணுகு சாலை மற்றும் பாரம்பரிய சாலை அமைக்கும் பகுதிகளில் 40 -க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் கடற்கரை வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மின்விளக்குகள் அமைக்க ஆணையா் உத்தரவிட்டாா். அதையடுத்து சூரிய மின்விளக்குகளை நீலக் கொடி கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புக் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வின்படி 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீன் பிடிக்க பயன்படுத்திய மின் விளக்குகள் பறிமுதல்

ஒசூரில் பகலில் எரியும் மின்விளக்குகள்!

மெரீனாவில் கத்தியால் குத்தி இளைஞா் கொலை

ராணிப்பேட்டை: 51 இடங்களில் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் - எஸ்.பி. இயக்கி வைத்தாா்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




