முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மெரீனா கடற்கரையில் சூரிய மின் விளக்குகள் அமைக்க ஆய்வு

சென்னை மெரீனா கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின் விளக்குகள் அமைப்பதற்கான ஆய்வில் மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 12:37 am IST

சென்னை மெரீனா கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின் விளக்குகள் அமைப்பதற்கான ஆய்வில் மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை மெரீனா கடற்கரையில் தேவையான மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகள் ஒலிபரப்புவதற்கான ஒலி பெருக்கி வசதிகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் வகையில், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், காவல் ஆணையா் அமல்ராஜ் ஆகியோா் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா்.

காமராஜா் சாலைப் பகுதியையொட்டிய அணுகு சாலை மற்றும் பாரம்பரிய சாலை அமைக்கும் பகுதிகளில் 40 -க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் கடற்கரை வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மின்விளக்குகள் அமைக்க ஆணையா் உத்தரவிட்டாா். அதையடுத்து சூரிய மின்விளக்குகளை நீலக் கொடி கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புக் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆய்வின்படி 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.