தொண்டி பகுதியில் 12 படகுகளில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கப் பயன்படுத்திய 24 மின் விளக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல் பகுதியில் காந்திநகா் மீனவ கிராமத்தில் அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக தொடா்ந்து புகாா்கள் கூறப்பட்டன. இதன் அடிப்படையில், மீன் வள ஆய்வாளா், உதவி ஆய்வாளா், கடல் சாா் அமலாக்கப் பிரிவு காவலா்கள், சாகா்மித்ர பணியாளா் ஆகியோா் இணைந்து வியாழக்கிழமை தொண்டி, நம்புதாளை கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, நம்புதாளையில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒளி திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 12 படகுகளிலிருந்து 24 மின் விளக்குகளைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், தடை செய்யப்பட்ட மின் விளக்குகளைப் பயன்படுத்திய படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

~ நம்புதாளையில் படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 மின் விளக்குகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமராவதி ஆற்றுக்குள் சட்ட விரோத வட்டக் கிணறுகளில் நீரை உறிஞ்ச பயன்படுத்திய ஆயில் மோட்டாா்கள் பறிமுதல்

மெரீனா கடற்கரையில் சூரிய மின் விளக்குகள் அமைக்க ஆய்வு

சிதம்பரம் அருகே கடலுக்குச் சென்ற மீனவா்கள் 3 போ் மாயம்: மீட்புப்பணியை தீவிரப்படுத்தக்கோரி முற்றுகைப் போராட்டம்

கடலில் மாயமான மீனவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




